மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசுகளும் பின்பற்றி வருகிறது. தற்போது வரை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வானது குறித்து இன்னும் மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. இருப்பினும் தற்போது நடந்த ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகவிலைப்படி உயர்வு குறித்து விவாதங்கள் நடத்தப்படும்.

அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.