தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்து விட்டார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு ஆளுநரை வெளியேறுமாறு கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  அவர் ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம் என்றார். அதோடு அச்சிடப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.  அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்து விட்டு சென்றார். வழக்கமாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்த பின்னரே ஆளுநர் சபையை விட்டு வெளியேறுவார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற என்று கூற அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதால் கோபத்தில் ஆளுநர் பாதியிலேயே வெளியில் விட்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆளுநர் வெளிநடப்பு செய்வதற்கு ட்விட்டரில் பலரும் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். அதாவது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக எதிர்க்கட்சிகளை போன்ற ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார் என்று பலரும் விமர்சிக்கிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஆளுநர் ஆர்.என். ரவி தான் என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் வருகிறது.