திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை; MLA-வாக பொன்முடி தொடர்கிறார் என்று தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது தேர்தல் அதிகாரியும் MLA-வாக தொடர்வதாக கூறியதால், ஆளுநர் சென்னை திரும்பிய உடன், அவர் அமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமைச்சரவையில் இலாக்கா மாற்றப்படும்.