தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வயது மூப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பதவி உயர்வுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதனபடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான தகுதிப் பட்டியலில் 1,016 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதற்கான இறுதிப் பட்டியல் வெளியான நிலையில், அதன் விவரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதுசார்ந்த நடவடிக்கைகளை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அதற்கான ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது