தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமலும், குழப்பம் இன்றியும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.