தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது எனவும் ரேஷன் கடைகளின் சுற்றுப்புறத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் தர மற்ற ரேஷன் பொருள்களை அல்லது எடை குறைவான பொருட்களை பொது மக்களுக்கு வழங்க கூடாது என்றும் ரேஷன் அட்டைதாரர்களை மரியாதை உடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.