தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.