தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே நாளை விடுமுறை என்பதால் இன்று மது கடைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.