தமிழகத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் ஐஏடி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவி தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமான ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.