ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, காங்.. தேமுதிக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில், புதிய கட்சி ஒன்றும் போட்டியிட உள்ளதாக அறிவித்து தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆம்!, மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா 2 நாட்களுக்கு முன் “தமிழர் தன்னுரிமைக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.