தமிழகம் முழுவதும் இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களை ரோந்து வாகனத்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்கள் தேவைப்பட்டால் அழைக்கலாம்.

காவல்துறை ரோந்து வாகனம் பெண்கள் தனியாக இருக்கும்  இடத்துக்கே வந்து அழைத்துச்செல்லும். மேலும் அச்சப்படும் பெண்கள் 1091, 112, 044-2345 2365, 2844 7701 உள்ளிட்ட எண்களில் அழைக்கலாம். அனைத்து நாள்களிலும் இந்த சேவையை இலவசமாக பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது..