தமிழகத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய தினக்கூலி  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 882 ரூபாய் வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருவதால் ஊதியத்தை உயர்த்த கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.