சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் நவம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.