இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. மக்களை மோசடி வலையில் வீழ்த்தும் வகையில், சில சமூக விரோதிகள் இவ்வாறு போலியான குறுஞ்செய்தி அனுப்புவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் இது போன்று போலி குறுஞ்செய்தி பரப்பப்படுவதாகவும், இதனுடன் வரும் இணைய லிங்க்-ஐ கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி புகார் அளிக்க
குறுஞ்செய்தி வந்தவுடன் 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.