தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாறிவரும் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்ததாகவும் அதன்படி 80 ஆயிரம் பேருக்கு மூன்று கட்டங்களாக டேப் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.