தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய கல்வி ஆண்டில் வகுப்புக்கு வராத மாணவர்களில் லிஸ்ட் எடுத்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர வைப்பது தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. சமீப காலமாக மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகி வருவதால் அதனை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.