தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

காவிரி டெல்டா பாசன கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிய உள்ளார். மேலும் குருவை சாகுபடிகாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் குறித்த டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.