தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கப்படும் என்றும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் விரைவில் கண்கருவிலி மூலம் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.