இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் மைசூரு-சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவிருப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சென்னை-மைசூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய ரயில் சேவை, ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் புதன் கிழமையை தவிர மற்ற 6 நாட்களும் இயங்கும். காலை 6 மணிக்கு மைசூரில் புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு சென்னை வந்தடையும்.