தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் மூலம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த வினாத்தாள் கசிவை தவிர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி வினாத்தாள் கசிந்தால் தொடர்புடைய கல்வி நிறுவனம் இது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை ஆசிரியர்கள் கவனமாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.