சென்னையில் இன்று அதிகாலை தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.