தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் அதாவது மே 18ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வரை மேலும் ஓர் ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட ஆசிரியர்களின் பணி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு இன்று முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.