தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.