தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், நாமக்கல், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.