தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிலைகள் வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு எவ்வாறு கரைக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் தெர்மாகோல் ஆகிய கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கக் கூடாது. சுற்று சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதி. சிலைகளை வடிவமைக்கும் சிற்பிகள் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கான ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் மட்டுமே வண்ணம் தீட்டி பயன்படுத்த வேண்டும். இந்த விதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.