தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, குரும்பட்டி சேலம் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் உயிரியல் பூங்கா ஆகிய நான்கு பூங்காக்கள் நுழைவு கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டணம் தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.