படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் ஆனது கரூர் தான் தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் 8,10, 12 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடையவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் சுயவிவர குறிப்பு, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். அதோடு www.tnprivatejobs.tn gov in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.