தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் தற்போது கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியிலிருந்து களை எடுக்கப்பட்டு தற்போது அதிமுக என்ற பயிர் செழித்து வளர்வதாக ஓபிஎஸ்ஐ மறைமுகமாக இபிஎஸ் சாடினார். தஞ்சையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய இபிஎஸ், காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அப்போதைய அதிமுக அரசுதான் என பெருமிதம் கூறினார். அதோடு கட்சியில் தனிமனித ஆதிக்கம் கிடையாது என்றும் தமிழகத்தில் நம்மை யாரும் அழிக்க முடியாது எனவும் கூறினார். மேலும் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரவுள்ளது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமையும் எனவும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் இபிஎஸ் உறுதியோடு கூறியுள்ளார்.