தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆவணத்தை காண்பித்தாலும் கட்டணம் இல்லா பயணத்திற்கு அனுமதி மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த அனைத்து சாதாரண கட்டணம் வசூலிக்கும் நகர பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் அவர்களுக்கு துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேரும் அடையாள அட்டையை காண்பித்த கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் உரிய ஆவணங்கள் காண்பித்தாலும் ஒரு சில நடத்துனர்கள் மாற்று திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணிப்பதற்கு அனுமதிக்கவில்லை. எனவே சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் வரும் உதவியாளர் ஆகியோர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது புத்தகத்தை காண்பித்தால் அவர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டு நடத்துனர்கள் வழங்க வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது