தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளும் முதல் மூன்று மதிப்பெண் பெரும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சந்திப்பு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் அவரது பனையூர் அலுவலகத்தில் மாணவர்களை சந்தித்து பரிசளிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.