ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.

குடும்ப அட்டை மிக மிக அவசியமானது என்பது மட்டுமின்றி, அது தான் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான அடிப்படை ஆவணம் ஆகும். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த உடன், விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.