தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை உயர உள்ளதாக சமீப காலமாக தகவல் பரவி வருகின்றது. அதன்படி விலை உயர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதாகவும் மதுபானங்களின் புதிய விலை உயர்வு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா ஆகிய பாட்டில்களின் விலை குவாட்டருக்கு பத்து ரூபாயும், ஆஃப்க்கு 20 ரூபாயும், ஃபுல்லுக்கு 40 ரூபாய் வரை உயர உள்ளது. ப்ரீமியம் பாட்டில்கள் குவாட்டருக்கு 20 ரூபாய், ஃபுல் 80 ரூபாய் வரை எனவும் பீர்களின் விலை 10 ரூபாய் உயர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.