தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படிப்பதற்காக நடைபெற இருந்த தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பட்டயப் படிப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 24, 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.