டாஸ்மாக்கை மூடுவேன் என வாக்குறுதி கொடுத்த கலைஞருக்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவரிடம், டாஸ்மாக்கை எப்போது மூடுவீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “2016 தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை மூடுவேன் என கலைஞர் கூறியிருந்தார். நீங்கள் கலைஞருக்கு ஓட்டு போட்டீர்களா?” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.