தமிழகம் முழுவதும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 1,026 SI- க்கள் காத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையில் 10 ஆண்டுகள் ஒரு பதவியில் இருந்தால் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அளவில் 1026 பேர் நேரடி SI -க்களாக தேர்வானார்கள். அவர்கள் தங்களின் 10 ஆண்டுகள் பணியை முடித்தும் இன்று வரை அதாவது 12 ஆண்டுகள் கடந்தும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.