தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர் மோர் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கோயிலுக்குள் கருங்கல் பதிக்கப்பட்ட பகுதிகளில் தரைவிரிப்பு போடப்படும் என்றும், நீர் மோர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.