தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.