பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. அந்த நாளை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 19ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் ஆக.3ல் உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதே காரணத்திற்காக ஈரோடு, சேலம் மாவட்டத்திலும் ஆக.3 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களும் செயல்படாது