திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து கரூருக்கும் கரூரில் இருந்து திருச்சிக்கும் இயக்கப்படும் முன்பதிவு இல்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனைப் போலவே கரூரில் இருந்து சேலத்திற்கும் சேலத்தில் இருந்து கரூருக்கும் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா சிறப்பு விரைவு விரைவுகள் அனைத்தும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.