
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.