ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என வங்கிகள் உட்பட அனைத்திற்கும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதே மாதிரியான மூன்று நாள் தொடர் விடுமுறை இந்த வாரமும் வருகிறது. வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு, அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் என எதுவும் இயங்காது.