பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ. 50,000-ம், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கான நிதி உதவியாக ஒரு பவுன் தங்கத்துடன் ரூ. 25,000-ம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக புகார்கள் கூறப்படும் நிலையில், அந்த திட்டம் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த நிதி தற்போது புதுமைப் பெண் திட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி இருப்பதாக சட்டமன்றத்தில் இபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘நாட்டுக்கு என்ன தேவையோ அதை அதற்கேற்ப மேம்படுத்தி கொள்வது தான் முதிர்ச்சி அடைந்த சமூகத்திற்கான அடையாளம்’ என்றார்.