மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோடை காலத்தில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.