
மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது. வார இறுதி என்பதாலும், இன்றும் (ஏப்.21) விடுமுறை என்பதாலும் நேற்றைய தினம் அதிகளவில் மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.