தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மது கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆய தேர்வு துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்படுகின்றன.

அதன்படி சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள், கோவை மண்டலத்தில் 78, மதுரையில் 125, சேலம் மாவட்டத்தில் 59 மற்றும் திருச்சியில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மூடப்பட உள்ள கடைகளின் பணியாளர்களை வேறு இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.