தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய தொழிற் சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதால் அதன் பிறகு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.