தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்ததாவது, “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு விழாவான கபடி சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி ஜூன் மாதம் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார். மேலும் உலககோப்பை கபடி போட்டி தமிழகத்தில் நடத்துவது பற்றி முதல்வரிடம் கலந்தாலோசிக்கப்படும்” எனவும் கூறினார்