முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு திடீரென்று பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.