பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி இன்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) தருமபுரி மாவட்டத்துக்கும், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மேலே குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது