முகூர்த்த நாளான இன்று, வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 265 பேருந்துகளும்,  சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1925 பேருந்துகள் இயங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.